best blogger tipsGet snow effect
உலக முழுதுந் தொழுதேத்தி
...உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை
...யிலிங்க மயமா யிருப்பாவைக
கலக மயக்கங் கழன்றோடக்
...கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர்
...ஆடிப்பு என்றன் முடிக் கணியே.
 
 
தென் தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில்
சதுரகிரி மலை அமைந்துள்ளது. சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்றுஅழைக்கிறார்கள்.
 
கிழக்குத் திசையில் இந்திரகிரியும்,
தென்திசையில் ஏமகிரியும்,
மேற்குத் திசையில் வருணகிரியும்,
வடதிசையில் குபேரகிரியும்,
இவற்றின் மத்தியில் சிவகிரி,
பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சப்தகிரி
என்னும் நான்கு மலைகளும் அமைந்திருக்கிறது.
இது தவிர இந்நான்குமலைக்கு மத்தியில்
சஞ்சீவி என்ற ஓர் அற்புத மலையும் இருக்கிறது.
இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும்.
இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிடலிங்கமாகும்.
அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.
அகத்தியர் முதலான பதினெட்டுசித்தர்கள் வாழ்ந்து வழிப்பட்டதும் இத்திருத்தலம்.
 
இத்திருத்தலத்திற்கு ஒரு முறைவருகை தந்து
சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம்,
கெளண்டின்ய தீர்த்தம்,
ஆகாய கங்கைதீர்த்தம்
ஆகியவற்றில் நீராடிவர்கள்
பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார்.
புத்துணர்வு பெறுவர்.
 
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி;
சிதம்பரத்தை வணங்கினால் முக்தி;
திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும்.;
காசியில் இறக்க முக்தி.
இந்தச் சதுரகிரி தலத்திலோ
இந்த நால்வகை முக்தி கிடைக்கும் என்பர்.

சதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.
 
 
நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.
 
அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.



ஒவ்

1 comments:

Post a Comment